Ads Area

சகோ. அதாவுல்லாவின் வன்முறையால்; எனது பயணத்தை நிறுத்த முடியாது.

சகோ. அதாவுல்லாவினாலும் ஆதரவாளர்களினாலும் திட்டமிடப்பட்டு - நேற்றிரவு உடைக்கப்பட்ட எனது வாகனம் எனக்கு பெரிதல்ல. அவர்களின் கோட்டை என்று அவர்கள் நம்பிக்கொண்டிருக்குமிடத்தில் - கூட்டம் நடத்தும் போது - இதையெல்லாம் சந்திப்பது பற்றி எனக்கு சிறிதளவும் சஞ்சலம் கிடையாது. கூட்டத்தை நடாத்தி முடிப்பதிலேயே கவனமாக இருந்தோம். நடாத்தி சலவாத்துடன் முடித்துவிட்டே வந்தோம்.

நேருக்கு நேர் நின்று மோதுவதற்கு தைரியமில்லாத கோழைகளாய் - இருட்டில் மறைந்து நின்று கல்லெறிவதுதான் அவர்களின் ஆண்மை என்பதை - மீண்டுமொருமுறை நிரூபித்து இருக்கிறார்கள். வன்முறைகளால் எனது பயணத்தை நிறுத்திவிட்டு முடியாது என்பதை இவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. எதையும் சந்திக்கத் தயாராகவே நான் களமிறங்கி இருக்கிறேன். அது என் உயிர் என்றாலும் சரியே.

இதற்கு முன்னரும் இது போன்று நான் சந்தித்திருக்கிறேன். எனது மனைவியும் பிள்ளைகளும் உறங்கும் போது - நள்ளிரவில் எனது வீட்டிற்கு குண்டடித்ததைப் போன்ற பொண்ணைத்தனத்தை - மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய அசில்.

நான் தேர்தல்களில் வன்முறைகள் நடக்க அனுமதிப்பதில்லை. அதில் அப்பாவி இளைஞர்கள் பலிக்கடாவாக்கப்படுவதை - நானே நேரடியாக அனுபவித்த கசப்பான அனுபவங்கள் - என்னை அப்படிச் செய்வதில் நின்றும் என்றும் தடுத்து நிற்கின்றன. ஒரு சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க - உச்ச கட்ட பொறுமையையும் நிதானத்தையும் சகிப்புத்தன்மையையும் பின்பற்றி வருகிறேன்.

அதிகாரமும் பதவியும் மக்களை அச்சுறுத்தும் கருவிகளல்ல. மாறாக, மக்களுக்கு அவை அமைதிக்கான மூலங்களாக இருக்க வேண்டும் என்பதை திடமாக நம்புபவன் நான். ஆனால், சகோ. அதாவுல்லா இத்தனை வயதிலும் அனுபவத்திலும் இதனை கற்றுக்கொள்ளாதது - அவரின் அளவு கடந்த அதிகார மற்றும் பதவி மோகத்தின் உச்சத்தையே காட்டுகிறது.

நானும் வன்முறையை கையில் எடுக்க சில கணங்களே எடுக்கும். ஆனால், மக்களின் நிம்மதியும் அமைதியும்தான் அதில் தொலைந்துபோகும். ஜனநாயக உரிமைகளை வன்முறைகொண்டு அபகரிப்பதை - தர்மத்தின் வழியில் நியாயப்படுத்த முடியாதது.

வாக்குகளுக்காக சொந்த மக்கள் மீதே வன்முறை பாவிப்பது - அராஜகத்தின் உச்ச கட்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்கு மக்களே பதிலளிக்க வேண்டும். பழைய பதிலை மறந்துவிட்டவருக்கு - மீண்டும் ஒரு முறை “பழம் பாடம்” சொல்லிக்கொடுக்க வேண்டும். படுக்கையில் போட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்.... இந்த முறையும் அது நடக்கும். தோல்வியும் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்

- ஏ.எல்.தவம் -




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe