மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் பச்சை நிற துணியை தொங்கவிட்டுள்ளார்களே? ஏன் தெரியுமா? அதுமட்டுமல்லாது மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் போதும் பச்சை நிற உடையையே அணிகிறார்கள். அதே போல் நோயாளிகளுக்கும் அதே நிற ஆடை கொடுக்கப்படுகிறதே? ஏன் தெரியுமா?
சிவப்பு நிறத்தை ஒரு நிமிடம் உற்று பாருங்கள் பின்னர் உடனே வெள்ளை நிறத்தை பாருங்கள். இப்போது அந்த வெள்ளை நிறத்தில் பச்சை நிறம் தெரிகிறதா? நீண்ட நேரம் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் தொடர்ந்து சிவப்பு நிறத்தையே பார்த்து கொண்டிருக்கும் போது, மூளையில் உள்ள வண்ணத்தை வேறுபடுத்தி காட்டும் கூம்பு செல்கள் உணர்விழக்க நேரிடும். இறுதியில் சிவப்பு நிறத்தை அடையாளம் காண்பதே அரிதாகிவிடும். இதனால் தோலிற்கு இரத்தத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் தவறு செய்ய நேரிடலாம்.
இப்போது இவர்களை சுற்றி வெள்ளை நிறம் இருக்கும் போது, இரத்தத்தை பார்த்துவிட்டு வெள்ளைநிற பின்னணியை பார்க்கையில் மீண்டும் நோயாளியின் உறுப்பை காணும்போது அது பச்சை நிறமாக தெரிந்துள்ளது. மீண்டும் குழப்பம்!
இப்போது இவர்களை சுற்றி வெள்ளை நிறம் இருக்கும் போது, இரத்தத்தை பார்த்துவிட்டு வெள்ளைநிற பின்னணியை பார்க்கையில் மீண்டும் நோயாளியின் உறுப்பை காணும்போது அது பச்சை நிறமாக தெரிந்துள்ளது. மீண்டும் குழப்பம்!
மேலும் வைத்தியர்கள்கள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் போது அதிக நேரம் கண்களை திறந்து உற்றுப் பார்த்து அறுவைக் சிகிச்சை செய்யும் போது அவர்களது கண்கள் களைப்பாக ஆகும் அவ்வாறு களைப்பாகும் போது அவர்கள் உடனே பச்சை நிறங்களைப் பார்த்தால் அது கண்களுக்கு குளிச்சியைக் கொடுக்கும் இதனாலும் பச்சை நிற ஆடைகளை அவர்கள் அணிந்திருக்கின்றார்கள், பலர் நீல நிற ஆடைகளையும் அணிவதுண்டு.
இயற்கைக் காட்சிகளை, பச்சை நிறப் புல் வெளிகளைப் பார்வையிடும் போது நமது மனதிற்குல் ஒரு உற்சாகம் கண்களுக்கு ஒரு குளிர்ச்சி கிடைக்கின்றதல்லவா அவ்வாறுதான் இதுவும்.