வந்தே பாரத் திட்டத்தின் நான்காம் கட்ட நடவடிக்கையில் இரு தினங்களுக்கு முன்பு தமிழகம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த விமான பயணத்திற்கான டிக்கெட் விற்பனை இன்று மாலை 4 மணி முதல் தொடங்கும் என இந்திய துணை தூரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்திய துணை தூதரகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “இந்திய தூதரகம் அல்லது துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட இந்தியர்கள், பயணத்திற்கு தேவையான நிபந்தனைகளை பூர்த்திசெய்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முன்பதிவு அலுவலகங்கள் மூலமாகவோ அல்லது www.airindiaexpress.in என்ற இணையதளத்திலோ அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்” என தெரிவித்துள்ளது.
Thanks - Khaleej Tamil News