Ads Area

மல்வத்தை விபுலானந்த வித்தியாலயத்திற்கு சுகாதார கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

(காரைதீவு  நிருபர் சகா)

சம்மாந்துறை  வலயத்துக்குட்பட்ட சம்மாந்துறைக்  கோட்டத்திலுள்ள   மல்வத்தை விபுலாநந்தா மகா வித்தியாலயத்திற்கு அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம்  ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதியை வழங்கிவைத்தது.

நீண்ட கொரோனா விடுமுறைக்குப்பின் திறபடும் பின்தங்கிய பாடசாலைகளுக்கு சுகாதார பாதுகாப்பு மற்றும்  கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் செயற்றிட்டத்தின் மூன்றாவது   நிகழ்வு நேற்று  நடைபெற்றது.

வித்தியாலயஅதிபர்  திருமதி கௌசல்யா கணேஸ்வரன்   தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   நிதியத்தின் பிரதிநிதியும் வலயக்கல்விப்பணிமனை பிரதிநிதியுமாகிய உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா  அதிதியாகக் கலந்து கொண்டார்.

நிதியத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் இளம்விஞ்ஞானி சோ.வினோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்கள்  கலந்துகொண்டனர்.

முகக்கவசங்கள் கையுறைகள்  கிருமிநாசினி தெளிக்கும்கருவி வெண்தாள்கள் உள்ளிட்ட தொகுதி பாடசாலைக்கு அன்பளிப்புச்செய்யப்பட்டது.

கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு பாடசாலையில் கடைப்பிடிக்கப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பிரித்தானியா அன்னை சிவகாமி அறக்கட்டளை நிதியம் பின்தங்கிய 40 பாடசாலைகளுக்கு ஒரு தொகுதி சுகாதார மற்றும் கற்றல் உபகரணத்தொகுதிகளை வழங்கிவருவது தெரிந்ததே.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe