Ads Area

பெற்ற தாயை பேருந்து நிலையத்திலேயே விட்டு சென்ற அரக்க குணம் கொண்ட மகன்.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் மனிதர்களின் குணங்கள், நடவடிக்கையே மாறிவிட்ட பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் பெற்ற தாயை, கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து நிலையத்திலேயே அவரது மகன் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் மாவட்டம் மாச்சர்லா என்ற நகரின் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையின் முன்பு 68 வயதான மூதாட்டி ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தார். அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரிடம் விசாரித்தபோது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோவாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றதாகவும், அப்போது தனக்கு செய்து கொண்ட கொரோனா பரிசோதனையில் தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தனக்கு கொரோனா என்பதை அறிந்தவுடன் தனது மகன் இங்கு கொண்டு வந்து விட்டு சென்று விட்டதாகவும், வேறு எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவி செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதித்த தாயாரை அவரது மகனே பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற நிகழ்வு அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe