15 வயது பாடசாலை மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று நபர்களை திங்கட்கிழமை (24) மடம்பே போலிசார் கைது செய்தனர்.
குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டி கைது செய்யப்பட்டனர். மற்றும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் அவரது மாமா கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கோஹொம்பவத்தாவில் உள்ள மணக்குளம பகுதியைச் சேர்ந்த 58 மற்றும் 35 வயது பெண்கள் மற்றும் 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் தனித்தனியாக வாழ்ந்ததாகவும், அவரது பாட்டி அவருக்கும் அவரது இரண்டு தங்கைகளுக்கும் பொறுப்பாக இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த சிறுமியின் தாயும் பாட்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறியதால், குழந்தை காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மடம்பே காவல்துறையின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் ஆரம்பித்த விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
Credits - Newswire

