(சர்ஜுன் லாபீர்)
நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று(16) கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான முறையில் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்க காரியலயத்தில் அதன் தலைவர் அல்ஹாஜ் எம்.எம் ஜமால்த்தீன் தலைமையில் நடைபெற்றது
மேலும் இந் நிகழ்வில் கல்முனை பொதுச் சந்தை வர்த்தக சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.கபீர்,உப தலைவர் ஏ.எச் தன்சூல்,மற்றும் அல்ஹாஜ் ஏ.எல்.எம்.கபூல் ஆஸாத்,எம்.ஐ.எம் நஜீம்,அல்ஹாஜ் எம்.கரீம்,எஸ்.எம்.நிசார்,எம் தன்சீல், ஏ.எப்.எம் பர்சான் உட்பட ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் வர்த்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.