Ads Area

1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித கால்தடங்கள் சவுதி அரேபியாவில் கண்டுபிடிப்பு.

பண்டைய மனித நாகரிகத்தை அறியும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மனிதன் வாழ்ந்த இடங்கள், பயன்படுத்திய பொருட்கள், வாழ்ந்த காலம் என ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். பண்டையகால மனிதன், ஒரே இடத்தில் இல்லாமல், ஒவ்வொரு இடமாக புலம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தான். பெரும்பாலும் நீர் மற்றும் உணவு ஆதாரங்களை சார்ந்தே அவர்களது பரவல் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது வடக்கு சவுதி அரேபியாவில் 1,20,000 ஆண்டுகள் பழமையான மனித கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.     

Science Advances என்ற பத்திரிகையில் ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவில் உள்ள வறண்ட ஏரியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஏரி காணப்பட்டதால், அதிக அளவிலான மனிதர்கள் மற்றும் விலங்குகள் வந்திருக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

ஒட்டகம், எருமை, யானை உள்ளிட்டவற்றை வேட்டையாடுவதற்காக மனிதர்கள் இங்கே வந்துள்ளதாக கூறப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 7 தடங்கள் மனிதனுடையது என கண்டறியப்பட்டுள்ளது. அதில் சில கால்தடங்கள் அளவில் வேறுபடுகின்றன. அதுபோல் அதிக இடைவெளியுடன் காணப்படுகின்றன. இதனை வைத்து பார்க்கையில், இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்றாக சேர்ந்து நடந்திருக்கலாம் என கணித்துள்ளனர்.

வேட்டையாட பயன்படுத்தியதற்கான ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மனிதனின் காலடி தடம் மட்டுமல்லாமல் மேலும் 233 தடங்களும் கண்டறியப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் இருந்து யுரேசியாவுக்கு சென்ற மக்கள் நீர் ஆதாரத்தை தேடி, சவுதி அரேபியாவுக்கு வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.

செய்தி மூலம் - https://saudigazette.com.sa





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe