ஐ.எல்.எம் நாஸிம்
இவ் வருட சிறுபோக நெல் அறுவடை நிறைவடைந்து, பெரும்போக நெற்செய்கை ஆரம்பிக்கப்படுவதற்கிடையிலான சுமார் மூன்று மாத கால இடைவெளியில் வெற்று நிலமாகக் கிடக்கும் நெற்காணிகளில் மூன்றாம் போக பயிர் செய்கையான பாசிப்பயறு சம்மாந்துறை பிரதேசத்தில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன் நிகழ்வில் விசேட அதிதியாக விவசாய குழு தலைவர் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம் நெளசாத்,சம்மாந்துறை நீர்பாசன திணைக்களத்தின் பொறியியலாளர் எம்.நவாஸ் அம்பாறை மாவட்ட கரையோரத்திற்கு பொறுப்பான உப உணவு பயிர் செய்கையின் பாடவிதான உத்தியோகத்தகர் எஸ்.எச்.எ நிஹார் மற்றும் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் மூன்றாம் போக பயிர்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.