Ads Area

சவுதியில் நோயாளிகளின் அந்தரங்க உறுப்புகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட வைத்தியர் கைது.

சவூதி அரேபிய வைத்தியசாலையொன்றில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர், நோயாளிகளின்அந்தரங்க உறுப்புகளை படம்பிடித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட குற்றச்சாட்டில், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு;ளளார் என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்களின் நெறிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்ட மேற்படி மருத்துவரை மருத்து சேவையிலிருந்து இடைநிறுத்துமாறு சவூதி அரேபிய சகாதார அமைச்சர் தௌபீக் அல் ரபீயா உத்தரவிட்டார் என சவூதி அரேபிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி மருத்துவர், பிளாஸ்திக் சத்திரசிகிச்சைகளை மேற்கொண்ட பின்னர், நோயாளிகளின் உடலில் அந்தரங்கப் பகுதிகளை படம்பிடித்து, சமூக ஊடகங்களில் வெளியிட்டார் என  அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி மருத்துவரின் பெயர், அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறித்து தகவல் வெளியிடப்பட்டவில்லை.

சவுதி அரேபியாவில் மருத்துவத் துறையில் செய்யப்படும் முறைகேடுகள்-குற்றங்களுக்கு 10 ஆயிரம் ரியால் அபராதம் விதிக்கப்படுவதோடு, மருத்துவ உரிமமும் ரத்துச் செய்யப்படும் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

செய்தி மூலம் - https://gulfnews.com
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe