ஐ.எல்.எம் நாஸிம்
காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் ஏக மனதாக அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது .
33வது சபை அமர்வின் போதுஅடுத்தாண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கை யை காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசீரில் தலைமையில் திங்கட்கிழமை இன்று (10) இடம்பெற்றது.
சபை தவிசாளர் சபையில் சமர்ப்பித்தார்.
சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு - செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது
இதில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன -03, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் -02, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி -01, ஐக்கிய தேசியக் கட்சி - 02, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -02, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி-01 என மொத்தமாக 12உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அம்பாரை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.