Ads Area

அக்கரைப்பற்றில் 10 பேருக்கு கொரோனோ தொற்று : மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம்.

பாறுக் ஷிஹான்.

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்றுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் அக்கரைப்பற்று சுகாதாரப் பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று (26) வியாழக்கிழமையிலிருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கிழக்கு மாகாண சுகாதரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து, அவர்களை உடனடியாக கொரோனா தொற்றுக்காக சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், அந்த சுகாதாரப் பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe