Ads Area

பொது மக்களின் கடந்த காலக்கோரிக்கை நிராகரிப்பினால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள அம்பாரை கிட்டங்கி வீதி.

பாறுக் ஷிஹான்.

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ளநீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

தினமும் விவசாயிகள், மாணவர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ளநீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள சவளக்கடை அன்னமலை, சொறிக்கல்முனை, 4, 5, 6, 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாடப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்ட காலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கை இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும் மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயல் பகுதிகளில் தேங்கி நிற்பதனால், நெற்பயிர்கள் அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.










Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe