எஸ் ஜே புஹாது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகராக சம்மாந்துறை சேர்ந்த ஐ எல் எம் லாபிர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இவருக்கான பதவி உயர்வு கடிதத்தை கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் வழங்கி வைத்துள்ளார்.
இவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் ஐ எல் எம் ஜவாஹிரின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.