வாரியபொல – கட்டுபொத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பொலிஸ் ஜீப் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதுண்டதிலேயே இவ் விபத்துச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.