சம்மாந்துறை பிரதேச சபையினால் இயற்கை உரம் விற்பனை நிலையம் ஹிஜ்றா பொதுச் சந்தை கட்டிட தொகுதியில் மல்கம்பிட்டி வீதிபக்கமான கபூர் ஹோட்டல் அருகில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களின் வழிகாட்டலில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே. முஹம்மட் அவர்களின் கண்காணிப்பின் கீழ் சம்மாந்துறை பிரதேசத்தில் இயற்கை உரம் பாவனையினை அதிகரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரதேச மக்களினால் தரம் பிரிக்கப்பட்டு பிரதேச சபை ஊழியர்களினால் சேகரிக்கப்படும் குப்பைகளை வங்களாவடி - ஆலையடிவட்டையில் அமைந்துள்ள சேதனப் பசளை உற்பத்தி நிலையத்தினால் தரமான அடிப்படையில் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
விவசாயிகளை இயற்கை பசளை பாவனையினை அதிகரிக்கும் நோக்குடன் மிகக் குறைந்த விலையில் ஒரு கிலோ சேதனப் பசளை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
நஞ்சற்ற இயற்கை உரம் பாவனையினால் சிறு நீரகப் பாதிப்பு, புற்றுநோய், தோல் நோய்கள், போன்ற பாதிப்புக்களிலிருந்து மக்கனை பாதுகாக்கும் நோக்கில் விவசாயம் மற்றும் பயிர் செய்கைக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்.
இயற்கை உரத்தினை பெற்றுக் கொள்ளவும், மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளவும், முன்பதிவுகனை மேற்கொள்ளவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்
0760114214
0672260043