Ads Area

சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளராக தொடர்ந்தும் நௌஷாட், அ.இ.ம.க.வின் இடைநிறுத்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

கியாஸ் ஏ. புஹாரி

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாடை கட்சியிலிருந்து நீக்கி அ.இ.ம.கா. அறிவிப்பை விடுத்ததையடுத்த எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அதற்கான காலமும் வழங்கப்பட்டிருந்தது. 

இதற்கிணங்க தவிசாளர் சார்பில் தொடரப்பட்ட மேன்முறையீட்டுக்கமைவாக இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் குறித்த இடைநிறுத்தத்திற்கான தடை உத்தரவு சற்று முன்னர் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, இதனடிப்படையில் தொடர்ந்தும் தவிசாளராக நௌஷாட் அவர்களே செயற்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe