Ads Area

இரு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வெளிநாட்டில் இருந்து திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தல் இல்லை.

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்புவோர் கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தாமல் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இவ்வாறு அறிவித்துள்ளார்.

(நன்றி -தமிழன்)

அத்துடன் தடுப்பூசி எதனையும் பெறாமல், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

புதிய கொரோனா வைரஸின் புதிய மாறுபாட்டின் அறிகுறிகள் 7-10 நாட்களுக்குப் பின்னரே காணப்படுகின்றன என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார் .

ஆகையால் வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களை ஏழு நாட்களுக்குப் பிறகு வீடுகளுக்கு அனுப்ப முடியாது என்றும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe