Ads Area

மருதமுனையில் பல புதிய வீதிகள் அபிவிருத்தியில்.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கத்திற்கமைய நாட்டில் ஒரு இலட்சம் கிலோ மீட்டர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ், கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் வீதி அபிவிருத்திகளின் ஒரு பகுதி அம்பாறை மாவட்டத்தில்  மருதமுனைக் கிராமத்தில் பல புதிய வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகிறது.

இதற்கான  வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் கலாநிதி வஸீர் ஹுசைனின் வேண்டுகோளிற்கு இணங்க இடம்  பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் மருதமுனை காரியப்பர் வீதியின் மையவாடி குறுக்கு வீதிக்கு கொங்கிரீட் இடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe