குவைத்தின் பயான் (Bayan) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா தூதரகத்தில் அண்மையில் (24/07/21) கட்டிடத்தில் வைத்து தற்கொலை நடந்ததாக அவசரகால பாதுகாப்பு மையத்திற்கு ஒரு தகவல் கிடைத்தது, இதையடுத்து குவைத் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக தூதரக தலைமையகத்திற்கு சென்று பாதுகாப்பு(Security) ஊழியர் குளியலறையில் இறந்து கிடப்பதை கண்டுபிடித்தனர். அவர் தனக்குத்தானே துப்பாக்கியால் அவருடைய தலையில் சுட்டுக் கொண்டதாக பாதுகாப்பு வட்டாரம் வெளியிட்டுள்ள முதல்கட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. தற்கொலை செய்துக்கொண்ட இந்தியர் பெயர் ஜெகதீஷ் (வயது-44) என்ற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது. அவருடைய தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
அதே போல் குவைத்தின் Findas பகுதியில் தங்கி வேலை செய்து வந்த இந்தியா,தமிழகம், திருநெல்வேலி மாவட்டம் பணகுடியை அடுத்த பாஸ்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் மீகா (வயது-23). இவர் அவருடைய அறையில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற துயரமான செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவல் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி, இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை துவங்கவுள்ளதாக செய்தியில் தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதுபோல் மற்றொரு சம்பவம் குவைத்தின் Salmiya பகுதியில் நடந்துள்ளது பணிப்பெண் ஒருவர் குவைத் குடிமகனின் வீட்டில் உள்ள அவருடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த தற்கொலை தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் அவசரகால உதவி மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறை மற்றும் தடவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரனையை துவங்கியுள்ளனர். இந்த பெண்மணி எந்த நாட்டவர் என்ற தகவல் வெளியாகவில்லை.
குவைத்தில் அண்மைக் காலமாக வெளிநாட்டினர் அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
குறிப்பு - படத்தில் இருப்பவர் தற்கொலை செய்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 23 வயதுடைய மீகா என்பவராவார்.