(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை கோரக்கர் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் (23) வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நள்ளிரவில் தீமூட்டி அதிகாலையில் ஆலய பிரதமபூசகர் முருகேசு ஜெகநாதன் (ஆனைக்குட்டி) தலைமையில் தீமிப்பு வைபவம் நடைபெற்றது.
கொவிட் காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே கலந்துகொண்டனர். ஆலய நிருவாகத்தினர் மற்றும் பக்தர்கள்; சுகாதாரமுறைப்படி கலந்துகொண்டனர்.
கடந்த 13ஆம் திகதி காரைதீவில் கடல் நீர் எடுத்து வந்து திருக் கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவம் நேற்று தீமிதிப்புடன் நிறைவடைந்தது.
தீமிதிப்பு உற்சவமானது நேற்று நிறைவடைந்த தருணம் சர்க்கரை அமுது படைத்தல் முதல் சாட்டையடித்தல் வரையிலான மரபுரீதியான சடங்குகள் இடம்பெற்றன்.
ஆலய செயலாளர் கே.அழகுராஜா வைபவத்தை நெறிப்படுத்தி நன்றியுரையாற்றினார்.