Ads Area

இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றிய சம்மாந்துறை மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு.

 (காரைதீவு  நிருபர் வி.ரி.சகாதேவராஜா)

இலங்கை ஒலிம்பியாட் கணித மன்றம் நடத்திய இலங்கை கணித ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றிய சம்மாந்துறை வலய மாணவர் நால்வருக்கு, வலய கல்வி அதிகாரிகள் முன்னிலையில் பாராட்டு நிகழ்வொன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் பங்குபற்றிய சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களான எம். ஜ. பாத்திமா ஹில்மா, ஏ. என். பாத்திமா ஹிமா, எம். ஏ. ஹம்துன் அகமத்,  மற்றும் வேப்பையடி கலைமகள் வித்தியாலய மாணவி ஏ. ஆயிஷா ஆகியோரே பாராட்டப்பட்ட மாணவர்களாவர்.

சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம். ஏ. சஹதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன்  பிரதி; கல்விப் பணிப்பாளர்களான ஏ. எல். ஏ. மஜீத், யூ. எல். றியால், ஏ. நசீர்,கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். எம். எம். ஜௌபர் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe