காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் தனது முகநுால் ஊடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பில் பகிர்ந்து கொண்ட மிகத் தரக்குறைவான பதிவு தொடர்பில் தற்போது எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் தவிசாளருக்கு எதிராக சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றனுாஸ் முஹம்மத் அவர்களினால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கீழ்வருமாறு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொறுப்பதிகாரி,
பொலீஸ் நிலையம்,
சம்மாந்துறை.
2021.07.30
இலக்கம் 400B /1, கல்லரிச்சல் - 02,சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் எம் ஐ முஹம்மத் றணூஸ் மற்றும் இலக்கம் 160/A ,வைத்தியசாலை வீதி,சம்மாந்துறை எனும் முகவரியில் வசிக்கும் Dr. ஐ எல் அப்துல் மஜீத் ஆகிய நாங்கள் குற்றவியல் விசாரணையின் தகுதி வாய்ந்த அதிகார நிறுவனமான இலங்கைப் பொலீஸ் திணைக்களத்துக்கு தரும் முறையாக, சம்மாந்துறைப் பொலீஸ் நிலையத்தில் செய்ய விரும்பும் முறையீடாவது,
காரைதீவு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் கிரிஷ்ணபிள்ளை ஜெயசிறில் என்பவர் Krishnapillai Jeyasril எனும் தனது முகநூலில் இஸ்லாம் மார்க்கத்தில் இறைத்தூதர் என அழைக்கப்படும் உலக முஸ்லிம்களால் இறைவன் என நம்பப்படும் அல்லாஹ்வுக்கு அடுத்த இஸ்தானத்தில் நேசிக்கப்படும் முஹம்மத் நபி அவர்களை உலகின் முதலாவது சிறுவர் துஷ்ப்பிரயோகி என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுத்தீன் என்பவர் சொல்லியுள்ளதாக Reginold Rgi எனும் ஆள் அடையாளமற்ற முகநூலில் பிரசுரித்திருந்த ஒரு முகநூல் பதிவை பகிர்வு செய்ததன் மூலமாக
இலங்கை #அரசியலமைப்பின்_உறுப்புரை_10_மற்றும்_14(1)(e) மற்றும் 15(2) போன்றவைகளை மீறியுள்ளதுடன்
#இலங்கை_தண்டனைச்_சட்டக்கோவையின்_பிரிவுகளான_291(a ), 291(b ) மற்றும் பிரிவு 292 ஆகியவற்றின் கீழும்
#Prevention_of_Terrorism (Temporary Provisions) Act No. 48 of 1979 ன் பிரிவு 2 (1) (h) ன் படியும்
மேலும் #International_Covenant_on_Civil_and_Political #Rights(ICCPR) Act 2007இன் உறுப்புரை 3(1) ன் படியும் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளார்.
ஆதாரம் முறைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுத்தீன் அவர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவரால் குறித்த கருத்து வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்பதனை மிகத் தெளிவாக அறிந்திருந்தும் மேற்படி பதிவை அவர் பகிர்ந்தமையானது வேண்டுமென்றே அவர் குறித்த செயலைச் செய்துள்ளார் என அறிய முடிகிறது.
இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக எங்களது முறையீட்டைப் பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வண்ணம் உண்மையுள்ள
எம் ஐ முஹம்மத் றணூஸ் BA, LLB (Hons)
Dr ஐ எல் அப்துல் மஜீத் RAMP