பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
யானைக்கூட்டமொன்று புதிதாக முளைக்கின்ற புல்லினங்களை உண்பதற்காக நாடி வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் இன்று (9) மதியம் திடிரென சடயந்தலாவை, உகண பகுதிகளை ஊடறுத்து யானைகள் இவ்வாறு வருகை தந்துள்ளன.
குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல்லினங்களை உண்பதுடன் கூட்டத்திலுள்ள யானைக்குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
குறித்த யானைக்கூட்டத்தைப் பார்வையிட பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை அவதானிப்பதைக் காண முடிகிறது.
மேலும், இப்பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும், அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன், அருகிலுள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.