Ads Area

6 வருடங்களுக்குப் பிறகு ரஷ்ய சுற்றுலா பயணிகள் குழு இன்று இலங்கை வருகை.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாஸ்கோவிற்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியதால் ரஷ்யாவிலிருந்து சுற்றுலா பயணிகள் குழு ஒன்று இன்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) மற்றும் மாஸ்கோவின் டொமோடெடோவோ விமான நிலையம் (DME) ஆகியவற்றுக்கு இடையே 6 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விமானப் பயணப் போக்குவரத்து தொடங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 28 பிசினஸ் கிளாஸ் இருக்கைகளுக்காக கட்டமைக்கப்பட்ட ஏர்பஸ் ஏ 330 ஐப் பயன்படுத்தி தனது விமானங்களை ரஷ்யாவிற்கு இயக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மூலம் - https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe