கிழக்குமாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 750 ஐத் தாண்டியுள்ளது. இதுவரை 751 மரணங்கள் சம்பவித்துள்ளன. என்று கிழக்கு மாகாண சுகாதார துசேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்:
இதுவரை திருமலை மாவட்டத்தில் அதிகூடிய 263பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 251 பேரும் ,கல்முனையில் 148பேரும் , அம்பாறையில் 89 பேரும் மரணித்துள்ளனர். வழமைக்குமாறாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தொற்றுகளும் மரணங்களும் நான்கு மடங்காக அதிகரித்துக்காணப்பட்டன.
நேற்று வரை 44435 தொற்றுக்களும் ,751 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தற்போது வழங்கப்படும் தடுப்பூசியின் பின்னர் இத்தொகை குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கில் அதி ஆபத்து நிறைந்த பகுதிகளாக தெஹியத்தகண்டிய களுவாஞ்சிக்குடி உஹன அம்பாறை மட்டக்களப்பு தமன மகாஓயா ஆகிய பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 468பேர் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.10மரணங்கள் சம்பவித்திருக்கின்றன.
தடுப்பூசிகள்!
கிழக்கில் முதலாவது தடுப்பூசிகள் வழங்க 909520 கிடைத்தன. அதில் 833500 ஏற்றப்பட்டன. அதாவது 84வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டன. அதில் கூடுதலாக கல்முனை மட்டக்களப்பு சுகாதாரப்பிரிவுகளில் 94வீதமானவர்களுக்கும் இதிருமலையில் 81வீதமானவர்களுக்கும் அம்பாறையில் 60வீதமானவர்களுக்கும் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டன.
இரண்டாவது தடுப்பூசிகள் வழங்க 639600 கிடைத்தன. அதில் நேற்று வரை 49வீதமானவர்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன. அடுத்தவாரமளவில் இரண்டாம் கட்ட இரண்டாவது தடுப்பூசிகள் ஏற்றப்படும்.