தகவல் - கே.எஸ். மோகன் (ஆசிரியர்)
சம்மாந்துறை கல்வி வலையத்தில் உள்ள மல்வத்தை விபுலானந்தா தேசிய பாடசாலையானது தற்போது வெளிவந்துள்ள க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றில் சாதனை படைத்துள்ளது.
இம்முறை இப் பாடசாலையில் இரண்டு மாணவர்கள் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்ற வருடம் ஒரு மாணவர் சகல பாடங்களிலும் ஏ சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.