சவூதி அரேபியாவிற்குள் ஒரு டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற அனைவருக்கும் அனைத்து நாடுகளிலிருந்தும் நேரடியாக நுழைய அனுமதிக்கும் முடிவை சவுதி உள்துறை அமைச்சகம் அறிவித்ததுள்ளது.
உள்ளூர் மற்றும் உலகளாவிய தொற்றுநோயியல் நிலைமையை தொடர்ந்து பின்பற்றுவதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 4ம் தேதி அதிகாலை 1:00 மணி முதல் இது அமலுக்கு வருகிறது என அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. வரும் பயணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுவன தனிமைப்படுத்தலில் மூன்று நாட்கள் செலவிட வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

