குவைத் செல்வதற்காக தமிழகம் மற்றும் கோவா மாநிலத்தை சேர்ந்த 44 பெண்கள் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச நிலையம் வந்தனர். அதிகாரிகள் அவர்களுடைய விசாக்களை சோதனை செய்தனர்.
அப்போது, 40 பேரும் இரட்டை விசாக்கள் வைத்திருந்தது தெரியவந்தது. வேலைவாய்ப்பு மற்றும் பார்வையாளர்கள் என இரண்டு விசாக்கள் வைத்திருந்தனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.