சம்மாந்துறை அன்சார்.
"புதிய பாதைக்கு திரும்புவோம்" எனும் தொனிப் பொருளில் மக்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்று ஜே.வி.பி கட்சியினரால் சம்மாந்துறையில் இடம் பெற்றுள்ளது.
இந் நிகழ்வில் ஜே.வி.பி (JVP) கட்சியின் செயலாளர் விஜிதஹேரத் , ஜே.வி.பி கட்சியின் சம்மாந்துறை அமைப்பாளர் ASM. புஹரி மற்றும் NPP முஹமட் நபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபாரத் தளங்கள், வீடுகள் என சகல இடங்களுக்கும் சென்று மக்களைத் தெளிவூட்டும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.