Ads Area

சவுதியில் ஏவுகணைத் தாக்குதல் ; இருவர் மரணம், ஏழு பேர் காயம்.

சம்மாந்துறை அன்சார்.

சவுதியின் தெற்கு நகரமான ஜீசான் (Jizan) பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ஏவுகனைத் தாக்குதலில் ஒரு சவுதி குடிமகனும் ஒரு எமன் (Yemen) குடியிருப்பாளரும் மரணமடைந்துள்ளதாக சவுதியின்  செய்தி நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

சவுதி சிவில் பாதுகாப்பு பொது இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், லெப்டினன்ட் கர்னல் முகமது அல்-ஹம்மத் கூறுகையில், எமன் எல்லைக்குள் இருந்து ஜீசான் பிராந்தியத்தில் உள்ள சம்தா கவர்னரேட்டை நோக்கி ஹூதி போராளிகளால் ஏவப்பட்ட ஏவுகணை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஆறு சவுதி குடிமக்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் குடியிருப்பாளர் என 7 பேர் இதனால் காயமடைந்துள்ளனர்.

பொதுமக்களையும் பொதுமக்களின் பொருட்களையும் குறிவைக்கும் முயற்சிகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும் என்றும் என சவுதி தரப்பினர் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

செய்தி மூலம் - https://www.khaleejtimes.com



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe