Ads Area

தெனகம சிறி விஜயாராம தாதுகோபுரத்திற்கு சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கி வைப்பு-!

 தெனகம சிறி விஜயாராம தாதுகோபுரத்திற்கு கௌரவ பிரதமரின் தலைமையில் சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கி வைப்பு-!

ஹக்மன தெனகம சிறி விஜயாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதுகோபுரத்திற்கான சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் வழங்கும் உற்சவம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (28) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.

மியன்மாரின் மிண்டொன் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கோவிலில் இருந்து தெல்தெனிய ஸ்ரீ ஷாலவன போதி மஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய யடிராவன சீலானந்த தேரருக்கு வழங்கப்பட்ட சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் முதலில் கௌரவ  பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கௌரவ பிரதமரினால் இந்த சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் தெனகம சிறி விஜயாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் தாதுகோபுரத்தில் வைப்பதற்காக திஸ்ஸமஹாராம ராஜ மஹா விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய தேவாலேகம தம்மசேன தேரரிடம் வழங்கப்பட்டது.

இச்சூடாமாணிக்கத்துடனான கோபுர கலசம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி தாதுகோபுரத்தில் வைக்கப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.

வெஹெரஹேன பூர்வாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய கேகல்லே ரதனசாரே தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

மேலும் குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, பௌத்த விவகாரங்களுக்கான ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெரும, பிரதமரின் மத விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.எம்.ரத்நாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe