Ads Area

சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வு.

சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்ட நிகழ்வும் பகல் போசனமும் சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் இன்று (2021.12.26) நடைபெற்றது.

சங்கத்தின் தலைவர் A முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் SMM முஷாரப் அவர்கள் அழைப்பட்டிருந்தார். நிகழ்வுக்கு கௌரவ  அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் SLM ஹனீபா, நீர்ப்பாசன பொறியியலாளர் MSM நவாஸ் மற்றும் கூட்டுறவு உதவியாளர் MIM பாரிட் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு, விஷேட பிரமுகர்களாக சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் ACM ஸஹீல், டாக்டர் AN றியாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் றனூஸ் இஸ்மாயில், தபாலதிபர் AM அமீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கூட்டுறவு சங்கத்தின் தலைவர் அவர்கள்; பாராளுமன்ற உறுப்பினரின் சமகால அரசியல் நகர்வு குறித்தும், அம்பாறை மாவட்டத்தில் சுவீகரிக்கப்பட்ட  காணிகளை விடுவிப்பு செய்வதற்காக கரிசணையோடு செய்படுவது குறித்தும் சிலாகித்து பேசினார். விஷேடமாக சம்மாந்துறை கரங்காவட்டை காணி விடுவிப்பு சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் கடுமையாக உழைப்பதாகவும் அதற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், சம்மாந்துறை கிழக்கு சிக்கன கடனுதவும் கூட்டுறவு சங்கத்தின் காணியினை மேட்டு நிலமாக மாற்றி தொழிற்பேட்டை அல்லது வீட்டுத்திட்டம் ஒன்றை உருவாக்குவது பற்றியதான மூலோபாய ஏற்பாடுகளை செய்து அதற்கான நிதிகளை பெற்று திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கான யோசனையை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். 

உரை நிகழ்த்திய பிரதேச செயலாளர் SLM ஹனீபா அவர்கள், கூட்டுறவு சங்கத்தின் இயங்குதலை பாராட்டியதோடு அவ்வாறான் தொழிற்பேட்டை அல்லது வீட்டுத்திட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினருக்கு எப்போதும் உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் தான் இருக்கப்போவதாக தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதம அதிதி பா.உ. முஷாரப் அவர்கள், 

சம்மாந்துறை மண்ணுக்கு தான் எப்போதும் நன்றியுடையவராக இருப்பதாகவும் கடந்த தேர்தல் காலத்தின் போதான சம்மாந்துறை மக்களின் பெருந்தன்மை குறுத்தும் சிலாகித்து பேசியதோடு, இன்று சுனாமி நினைவுதினம் என்பதால், சுனாமி காலத்தில் சம்மாந்துறை மக்கள் பாதிக்கப்பட்டவர்களை அரவணைத்து உதவியமை குறித்தும் நன்றியறிதலோடு பேசினார்.

மேலும் சங்கத்தின் நடவடிக்கைகளை பாராட்டிய பாராளுமன்ற உறுப்பினர், குறித்த தொழிற்பேட்டை அல்லது வீட்டுத்திட்டம் அமைப்பது சம்பந்தமாக சங்கத்தினரையும், பிரதேச செயலாளரையும் இணைத்து பணியாற்றுவதற்கும் அரசாங்கத்திடம் பேசி தீர்வை பெற்றுத்தருவதற்கும் கரிசணையொடு கருமமாற்றபோவதாகவும் தெரிவித்தார்.

சமகால அரசியல் குறித்தும், வடகிழக்கு இணைப்பு பற்றி தற்போது எழுந்துள்ள பேச்சாடல்கள் பற்றியும் நிகழ்வில் உரையாற்றிய பா.உ. அவர்கள் கலந்துகொண்ட சங்கத்தினர், விவசாயிகள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe