சியால்கோட் படுகொலை சம்பவம் தொடர்பில் பிரியந்த குமார தியவதனவை வன்முறைக் கும்பலிடமிருந்து காப்பாற்ற முயற்சித்த பிரியந்தவின் சக ஊழியரான பாகிஸ்த்தானைச் சேர்ந்த மலிக் அட்னான் தனக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானினால் வழங்கப்பட்ட உயர் விருதை பிரியந்தவின் பிள்ளைகளுக்கும் இலங்கை மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
படுகொலை சம்பவம் தொடர்பில் சக்தி நியூஸ் ஃபர்ஸ்டிடம் (News First) பேசிய மாலிக் அட்னான்,
பிரியந்த குமார தியவதன வெள்ளிக்கிழமை (03) தனது அலுவலக வளாகத்தில் இருந்து சில சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்களை அகற்றியதற்காக பாகிஸ்தானின் சியால்கோட்டில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார்.
இந் நிலையில் பிரியந்தவை பாதுகாக்க தாக்குதல் நடத்தியவர்களிடம் தாம் முயன்றதாகவும், ஆனால் தன்னை எனது நண்பரைப் பாதுகாக்க முடியவில்லை என்றும் கூறினார்.
தனது துணிச்சலான செயலுக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனக்கு வழங்கிய விருதை பிரியந்த குமார தியவதனாவின் குழந்தைகளுக்கு அவர் மேலும் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.