சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தினை உருவாக்குவதற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நாட்டின் நிரந்தர சமாதானத்திற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணமும், உதவி தவிசாளர் மற்றும் செயலாளரின் விசேட உரையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் உதவி தவிசாளர் ஏ.அச்சு முஹம்மட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.சரீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் யு.எல்.ஏ.மஜீட், நிதி உதவியாளர் வை.வீ.கதீசா உம்மா, உத்தியோகத்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.