Ads Area

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் றிபாஸ் பதவியேற்பு.

Sarjoon Lafeer.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் இன்று(19)தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமையாற்றிய டாக்டர் ஜி. சுகுணன் நேற்று  (18) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு  மாவட்ட  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டாக்டர் றிபாஸ் நியமிக்கப்படவுள்ளார்.

காத்தான்குடியினைச் சேர்ந்த இவர் தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றுக்கின்மை குறிப்பிடத்தக்கது.

இப் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணன் உட்பட வைத்திய அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe