புலன் உறுப்புகளால் அபார சாதனை படைத்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் பெயரை பதித்த பர்ஸானுக்கு முதல்வர் வாழ்த்து..!
புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்கும் அசாத்திய சாதனை புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த எம்.எஸ்.எம். பர்சான் இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இச்சாதனை வீரர் பர்ஸான், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களை நேற்று மாநகர முதல்வர் செயலகத்தில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்ததாக உலகின் 26 நாடுகளில் வியாபித்திருக்கும் சர்வதேச சோழன் சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முன்னிலையில் எம். எஸ்.எம்.பர்சானின் இந்த சாதனை ஞாயிறு (06) கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையில் நிகழ்த்தப்பட்டது.
கண், காது, மூக்கு, வாய் ஆகிய புலனுறுப்புகளால் அபார சாதனையை மேற்கொண்ட எம்.எஸ்.எம்.பர்சான் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியதுடன் 12 நிமி டமும் 09 செக்கனில் குறித்த சாதனையை நிலைநாட்டியிருந்த நிலையில் சர்வதேச சோழன் உலக சாதனை நிறுவனத்தின் இலங்கைப் பிரதிநிதிகள் மற்றும் முதல்வர் உள்ளிட்ட அதிதிகளினால் இவருக்கான சர்வதேச சோழன் உலக சாதனை புத்தக சான்றிதழ், பதக்கம் என்பன வழங்கப்பட்டு, பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சின் பக்கீர், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், ஸாஹிரா தேசிய பாடசாலை அதிபர் எம். ஐ.ஜாபிர், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.கே.சனூஸ் உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் மற்றும் பல ஆர்வலர்களும் பங்கேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
-முதல்வர் ஊடகப் பிரிவு