Ads Area

இலங்கையில் இரு ஜேர்மன் பெண்களான சுற்றுலாப் பயணிகள் பாலியல் பலாத்காரம்.

இலங்கையின் கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பிரதேசங்களில் பதிவாகியுள்ள இருவேறு சம்பவங்களில் இரண்டு ஜேர்மன் பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கடந்த 6 வருடங்களாக ஜேர்மன் பெண்ணின் நண்பர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மற்றுமொரு ஜேர்மன் பெண்ணும் தங்காலை பிரதேசத்தில் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக தி டெய்லி மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஜேர்மன் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வழிகாட்டியான சந்தேகநபர் ஜேர்மன் பெண்ணுடன் தங்காலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமையன்று உள்ளூர் வழிகாட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி அந்தப் பெண் போலீசில் புகார் அளித்தார்.

குறித்த பெண் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டாரவளை எல்ல பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

(newswire)



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe