இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) மார்ச் 15 (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய பொது பேரணியை நடத்தவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான இந்த எதிர்ப்புப் பேரணியில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள், எரிவாயு மற்றும் மின் தட்டுப்பாடு குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
கொழும்பில் பிற்பகல் 2 மணி முதல் ஆரம்பமாகவுள்ள இந்த எதிர்ப்பு பேரணியில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொள்வார்கள் என SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.