ஏ.எச்.எம்.ஹாரீஸ் - மத்திய முகாம்
நாவிதன்வெளி சவளக்கடை பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் இன்று காலை 11.00 மணியளவில் தடம்புரண்டுள்ளது.
11ம் கொலணி கோவில் பிரதேசத்திற்கு கட்டுமானப் பணிக்காக சீமந்து பைகளை ஏற்றிச்சென்ற வட்டா லொறியின் பின் பக்க டயர் களன்டு விலகியதால், 14ம் கொலணியிலிருந்து கல்முனை நோக்கி வந்த முச்சக்கர வண்டி எதிரே வந்த வாகனத்தின் பதற்றத்தால் பாதையை விட்டு விலகி தட புரண்டுள்ளது.
இதில் பயணித்த பயணிகள் பலத்த காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.