Ads Area

சம்மாந்துறை, மல்வத்தையில் 60 க்கும் மேற்பட்ட காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரினால் 60க்கும் மேற்பட்ட காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தலைமையில் மல்வத்தை  விபுலானந்த   தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று 2022/03/27 இடம்பெற்றது . 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் V. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டு காணி அளிப்பு பத்திரங்களை வழங்கி வைத்தனர். 

மேலும் இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில் அவர்களால் நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கு காணிப் பயன்பாடு தொடர்பிலான விழிப்புணர்வு உரை நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வில் காணி உத்தியோகத்தர் TKM. ஜவாஹிர்,ஏனைய காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் , கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள்  மற்றும் பயனாளிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe