Ads Area

கல்முனையில் முற்று முழுதாக சேதன பசளை மூலம் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை.

 ( எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனையில் சுமார் இரண்டு ஏக்கரில்  முற்று முழுதாக  சேதன பசளை மூலம் பயிரிடப்பட்ட நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டது ‘சௌபாக்கியா’  தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் உப உணவு பயிர் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு விவசாய திணைக்களித்தினால்  நாடளாவிய பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் சனீர் அவர்களின் வழிகாட்டலில் ,கல்முனை விவசாய விரிவாகல் நிலையத்தின் பிரிவுக்குட்பட்ட கல்முனை அன்பு சகோதர இல்லத்தில் விவசாயி எஸ். நல்லதம்பி அவர்களினால் சுமார் இரண்டு  ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலக் கடலை  அறுவடை செய்யும்  நிகழ்வு  இன்று( 01) இடம்பெற்றது.

இதே வேளை குறித்த நிலக்கடலையானது முற்று முழுதாக சேதன பசளையை பயன்படுத்தி  பயிரிடப்பட்டு அறுவடை மேற்க்கொள்ளப்பட்டுவருவதுடன்  சிறந்த அறுவடை  கிடைக்க  கூடியதாக இருக்குமெனவும்  அத்துடன்  நோய்த் தாக்கம் குறைவாக காணப்பட்டதுடன்  உற்பத்தி செலவு குறைவடைந்துள்ளதாகவும்  இதன் மூலம்  அதிகரித்த  வறுமானம் கிடைக்கும்மென தாம் எதிர்பார்ப்பதாக விவசாயி எஸ் .நல்லதம்பி இதன் போது கருத்து தெரிவித்தார்.

கல்முனை விவசாய விரிவாகல் நிலையப் பொறுப்பு   விவசாய போதனாசிரியர்  எஸ் .கிருத்திகாவின்  நெறிப்படுத்தலில் ,நிலக் கடலை அறுவடையானது அம்பாரை  மாவட்ட மறு பயிர் செய்கை விவசாய பாடவிதான உத்தியோகத்தர் எஸ்.எச்.ஏ.நிஹார், கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் விவசாய போதனாசிரியர் என் .யோகலக்ஷ்மி ஆகியோரின்  மேற்பார்வையில் இடம்பெற்றது .

இதேவளை குறித்த இடத்தில் கடந்த சில மாதங் களுக்கு முன்னர் கல்முனை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் வழிகாட்டலில், உப உணவு பயிரான உளுந்து ,கெளபி  என்பன பயிரிடப்பட்டு  நல்ல விளைச்சல் பெறப்பட்டு அறுவடை செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது .







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe