பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று திங்கட்கிழமை (28) இரவு பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாமிலிருந்து சிவிலுடையில் சென்ற உத்தியோகத்தர் குழு அம்பாறை மாவட்டம், நிந்தவூர்ப் பகுதியில் சந்தேக நபரைக்கைது செய்துள்ளது.
இவ்வாறு கைதானவர் நிந்தவூர் மௌலானா வீதியைச் சேர்ந்த ஒருவராவர். குறித்த நபர் மோட்டார் சைக்கிளுடன் 2400 சிகரெட்டு பக்கெற்றினை எடுத்து செல்லும் போது கைதாகியுள்ளதுடன் அதன் பெறுமதி 102000 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கைதான சந்தேக நபர் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.