Ads Area

சம்மாந்துறை மற்றும் நிந்தவூர் வயல் பிரதேசங்களில் மாலை வேளையானதும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

 ( அஸ்ஹர் இப்றாஹிம்)

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மதுப்பாவனை அதிகரித்துள்ளது.

நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை விவசாய விஸ்தரிப்பு பகுதிக்குட்பட்ட வயல் பிரதேசங்களில் மாலை வேளையானதும் மதுப்பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது.

சாராய போத்தல்கள் மற்றும் பியர் டின்களுடன் பரிமாறும் இவர்கள் மது அருந்திய பின்னர் வெற்று போத்தல்களையும் , பியர் டின்களையும் வாய்க்கால்களிலும் ஆறுகளிலும் வீசி விட்டு செல்கின்றனர்.இவ்வாறான சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் இந்த செயற்பாட்டினால் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் , ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவர்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் என்பன பாதிப்பிற்குள்ளாவதோடு விவசாய நடவடிக்கைகளை தொடர்வதற்கு கும் அச்சப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு விவசாயிகள் தெரிவித்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe