(காரைதீவு சகா)
வரலாற்றுப்பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலயத்தின் புனராவர்த்தன மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழாவின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நேற்று (22) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
ஏராளமாக பக்தர்கள் வந்து அம்பாளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் எண்ணெய்க்காப்பு சாத்தினர்.
கும்பாபிசேக பிரதமகுரு சிவாச்சர்யதிலகம் சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் தலைமையில் ,ஆலயத்தலைவர் சீ.சுப்பிரமணியம் முன்னிலையில் மஹா கும்பாபிசேக கிரியைகள் யாவும் நடைபெற்றுவருகிறது.
இம் மஹா கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தி பெருவிழா நேற்றுமுன்தினம் 21ஆம்திகதி திங்கட்கிழமை வாஸ்துசாந்தி கணபதிஹோமம் உள்ளிட்ட கிரியைகளுடன் ஆரம்பமாகியது.
எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நேற்று 22ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இன்று 23ஆம் திகதி புதன்கிழமை 9.51மணி தொடக்கம் 11.03 மணி வரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் மஹாகும்பாபிசேகம் நடைபெறவிருக்கிறது.