Ads Area

சவூதியில் இறந்த தமிழரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு.

சவூதியில் இறந்தவரின் உடல் எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியன் சோசியல் ஃபோரம் உதவியால் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு.

சவூதி அரேபியா ரியாத் பகுதியில் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம் உலகியநல்லூர் பகுதியைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் ஆறுமுகம் (50), என்பவர் ரியாத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில் ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். 

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி செய்யுமாறு கேட்டு கொண்டனர்.

இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த ஆறுமுகத்தின் உடலை தாயகத்திற்கு 2022 மார்ச் 23 ஆம் தேதி திருச்சி சென்ற விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. 

எஸ்.டி.பி.ஐ கட்சியின் திருச்சி தெற்கு  மாவட்ட நிர்வாகிகள்  இன்று காலை திருச்சி விமான நிலையம் சென்று இறந்த ஆறுமுகத்தின் உடலை பெற்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்துச்செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் உடலை குடும்பத்தாரிடம்  ஒப்படைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு இறந்தவரின் உடலை தாயகம் அனுப்ப உதவி செய்த இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் இறந்த ஆறுமுகத்தின் குடும்பத்தார்கள் தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

இந்தியன் சோசியல் ஃபோரத்தின் மக்கள் சேவைகள் தொய்வின்றி தொடர்கின்றன உங்களின் ஒத்துழைப்புடன்..

இவண்,

இந்தியன் சோசியல் ஃபோரம்.

ரியாத்- தமிழ் மீடியா.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe