Ads Area

பத்தாயிரம் ரூபா கடனை அடைக்க முடியாமல் களுத்துறையில் 4 பிள்ளைகளின் தந்தை தற்கொலை.

களுத்துறையில் கடனை திருப்பி செலுத்த முடியாமல் 34 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

கடனை திருப்பிக் கொடுக்கத் தேவையான பணத்தை சேமித்து வைக்க கடுமையாக உழைத்த போதிலும், நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், ரூ.2000 கிடைக்காததால் தற்கொலை செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. 

அவரது பிள்ளைகள் பல நாட்களாக பட்டினியில் இருந்ததால் அவர் அத்தகைய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் வசிக்கும் 12 முதல் 3 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இலங்கையில் அண்மைக் காலமாக கடன் தொகையை செலுத்த முடியாததன் காரணமாக அதிகளவான தற்கொலைகள் பதிவாகியுள்ளன. 

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe