சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கைக்கான சவுதி தூதுவர் அப்துல் நாசர் அல்-ஹார்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்க உள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.