உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது கட்டாருக்கு சென்றுள்ள இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கத்தாரின் சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்துள்ளார்.
கத்தாரில் 300,000 வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (13) தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இவ் வேலைவாய்ப்பு நடவடிக்கையானது இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாட்டு வருவாயையும் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் கத்தார் சென்றிருந்தனர்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.