சம்மாந்துறை பிரதேச செயலக காணிப் பிரிவு ஏற்பாட்டில் சுமார் இருநூறுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு, காணி அளிப்பு மற்றும் அனுமதி பத்திரம் வழங்கும் நிகழ்வு கடந்த 09.03.2022ம் திகதி அன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் பிரதேச செயலாளர் S.L.M.ஹனீபா தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு கிழக்கு மாகாண போக்குவரத்து காணி அமைச்சின் செயலாளர் A.H.M.அன்சார், அம்பாறை மாவட்ட செயலாளர் J.M.A.டக்ளஸ், தவிசாளர் A.M.நௌஷாட், மாகாண காணி ஆணையாளர் D.M.R.P.தசனாயக்க, காணி ஆணையாளர் இப்திகார் பாணு, உதவி காணி ஆணையாளர் G.ரவிராஜன், தலைமைக் காணி உத்தியோகத்தர்,சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், காணி பதிவாளர் ஆகியோர் அதிதிகளாக நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்தனர்.